search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

    • அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களின் சாலைகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.
    • தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

    பாநாசம்:

    பாநாசம் இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மக்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பாபநாசம் பேரூராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி பாபநாசம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை வகித்தார். பாபநாசம் பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கழிப்பறை வசதி கட்டி தர வேண்டும்.

    பாபநாசம் பேரூரா ட்சியில் வசிக்கும் தொழிலா ளர்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்திடவேண்டும். பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு களிலும் உள்ள தெருக்களின் சாலைகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.

    திருப்பாலைத்துறை எஸ்.பி.ஜி மிஷின் தெரு, காளியம்மன் கோவில் தெரு பகுதிகளுக்கு சுடுகாட்டுக்கு மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும், ஆழ்குழாய் பம்பு அமைத்திட வேண்டும், சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உட்படு த்த வேண்டும் ஆகிய கோரி க்கைகளைவலியுறு த்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்ஈடுப ட்டனர்.

    இந்த ஆர்ப்பா ட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரபீக், மாநில பொருளாளர் அபிபுல்லா, மாநில அமைப்பாளர் அப்பாஸ் மந்திரி, தஞ்சை மாவட்ட தலைவர் அன்புராஜ், தஞ்சை மாவட்ட செயலாளர் செம்மலர்ச் செல்வி, பாபநாசம் ஒன்றிய தலைவர் கஸ்தூரி, பாபநாசம் ஒன்றிய செயலாளர்கள் ஷீலா, துரைகண்ணன், சீனிவாசன், மாநில துணைச் செயலாளர் ஜான், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார், பாபநாசம் ஒன்றிய தலைவர் வீரமணி, அய்யம்பேட்டை நகர தலைவர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×