கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் சார்பில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் நிர்வாகி ஆனந்தராஜ், ராஜா, மாவட்ட இணை செயலாளர் வெங்கட் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் தனியார்மய போக்கின் ஒரு பகுதியாக நீட் தேர்வு உள்ளதால், ஜல்லிக்கட்டு போல மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் சார்பில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Published on

அரவேணு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடல் பகுதியில் நீட் தேர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அந்த அமைப்பின் நிர்வாகி ஆனந்தராஜ், ராஜா, மாவட்ட இணை செயலாளர் வெங்கட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல பொறுப்பாளர் மன்னரசன், பெண்கள் இணைப்பு குழுவின் சாரா உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது நிர்வாகிகள் பேசுகையில், இந்திய மருத்துவத்தை தனியார்மயமாக்கும் போக்கின் ஒரு பகுதியாக நீட் தேர்வு உள்ளதால், ஜல்லிக்கட்டு போல மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com