search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிக்கப்பட்டு வேலை நடக்கிறது: அரூரில் மாற்று பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
    X

    இடிக்கப்பட்டு வேலை நடக்கிறது: அரூரில் மாற்று பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

    • அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப்பட வுள்ளது.
    • மாற்று பேருந்து நிலையம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டார்.

    அரூர் பேருந்து நிலைய வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப்படவுள்ளது.

    இந்த பேருந்து நிலைய வளாகத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன.

    தற்போது நவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

    இதையடுத்து, பேருந்து நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் குறித்து கடந்த மாதம் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும்போது அரூரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.

    அதன் பிறகு அரூர் பேரூராட்சி நிர்வாகம் மாற்று பேருந்து அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் நேற்று திடீரென்று அரூர் பேருந்து நிலையம் இடிக்கும் பணி துவங்கியதால் சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மாற்று பேருந்து நிலையம் இல்லாததால் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அதேபோன்று பேருந்தில் வரும் பயணிகள் எங்கே பேருந்து நிலையம் எங்கே செல்வது என்று புரியாமல் தவித்து வருகின்றனர்.

    பயணிகள் அந்தந்த பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக மாற்று பேருந்து நிலையம் அமைத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×