பாரத் மாண்டிசோரி பள்ளியில் 3-ம் நாள் தசரா கொண்டாட்டம்

பாரத் மாண்டிசோரி பள்ளியில் 3-ம் நாள் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. சமூக சேவை பற்றி லயா ரேச்சல் அன்னை தெரசா போல் வேடமணிந்து அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தினார்.
பல்வேறு வேடங்களஅணிந்து வந்திருந்த மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
பல்வேறு வேடங்களஅணிந்து வந்திருந்த மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 3-ம் நாள் தசரா கொண்டாட்டம் நடைபெற்றது. மாணவி முத்து ஜனனி இறைவணக்கப் பாடல் பாடினார். அனுபாமா வரவேற்றார். ஸ்ரீஜித் நிகழ்ச்சித் தொகுப்பு வழங்கினார். அர்ப்பணிப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பெற்றோர்களுக்கு கீழ்ப்படிதல் பற்றி விஷ்ணுவும், ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிதல் பற்றி காயத்ரியும், செயல் விளக்கமளித்தனர். சமூக சேவை பற்றி லயா ரேச்சல் அன்னை தெரசா போல் வேடமணிந்து அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தினார். பிரணவ் சிவவேடமும் குங்கும காயத்ரி சக்தி வேடமும் அணிந்து வந்தனர். ஜெயதர்சன் நன்றி கூறினார்.

பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா, ஆலோசகர் உஷாரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com