search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
    X

    தை அமாவாசையை முன்னிட்டு, குடும்பத்தில் மறைந்த முன்னோருக்கு காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி, இன்று காலை மேட்டூர் காவிரி பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையில் ஏராளமானோர், மறைந்த முன்னோர்களுக்கு அரிசி மாவு பிண்டம் வைத்து பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

    • தை அமாவாசையான இன்று, கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சேலத்தில் பல்வேறு இடங்களில் நடந்தது.
    • சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    சேலம்:

    ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்க ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம்.

    அதன்படி, தை அமாவாசையான இன்று, கோவில்கள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சேலத்தில் பல்வேறு இடங்களில் நடந்தது.

    சுகவனேஸ்வரர் கோவில்

    சேலம் சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் வாழை இலையில் பூ, தேங்காய் மற்றும் சில காய்கறிகள், பழங்களை வைத்தனர். பின்னர் அர்ச்சர்கள் மந்திரம் முழங்கினர். அப்போது தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் தங்களின் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து எள் சாதம் கலந்தள உணவை சம்பந்தப்பட்டவர்கள் காகங்களுக்கு வைத்து வழிபட்டனர். மஞ்சள், அரிசி கலந்ததை தர்ப்பணம் செய்ய வந்தவர்களின் குடும்பத்தினரின் நெற்றியில் அர்ச்சகர்கள் இட்டனர்.

    இதேபோல் சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சேலம் சின்னதிருப்பதி பெருமாள் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்திலும் பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபாடு நடத்தினர்.

    மேட்டூர்

    மேட்டூர் காவிரி பாலம் மற்றும் மேட்டூர் அனல்மின் நிலைய புதுப்பாலம் ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி, தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு காவிரியில் குளித்து தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    Next Story
    ×