search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே கொடி கம்பங்கள் அமைந்துள்ள சிமெண்ட் கட்டை சேதம்  5 பேர் மீது வழக்கு பதிவு
    X

    தியாகதுருகம் அருகே கொடி கம்பங்கள் அமைந்துள்ள சிமெண்ட் கட்டை சேதம் 5 பேர் மீது வழக்கு பதிவு

    • திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூ.பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டு. இவரது மகன் பாஸ்கர் (வயது 35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (45) என்பவருக்கும் கடந்த ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற போது முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்றுபாஸ்கர் தனதுஅண்ணன் சக்கரவர்த்தியுடன் சூ. பள்ளிப்பட்டியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது சிலர் தே.மு.தி.க. கொடி கம்பம் அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பாஸ்கர் ஏன் உடைக்கிறீர்கள்? என கேட்டதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவராமன் ஆகியோர் பாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாஸ்கர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதே போல் முருகன் என்பவர் கொடுத்துள்ள புகாரில் பாஸ்கர் மற்றும் இளங்கோவன் ஆகியோர் தி.மு.க. கொடி கம்பம் அமைந்துள்ள சிமெண்ட் கட்டையை இடித்து சேதப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். இரு பிரிவினரும் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×