search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.அம்மாபேட்டையில்   விநாயகர் சிலைகள் கரைப்பு
    X

    டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.

    டி.அம்மாபேட்டையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

    • விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
    • பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த டி.அம்மாபேட்டையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், தீர்த்த மலை, கோட்டப்பட்டி, அனுமன்தீர்த்தம், கோ.கூட்டுரோடு, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    விநாயகர் சிலைகளை தென்பெண்ணை ஆற்றில் கரைக்க செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, அரூர் வட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

    Next Story
    ×