search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாண்டஸ் புயல் கரையை கடந்தது: கடலூர் மாவட்ட மீனவர்கள்  இன்று முதல் மீன் பிடிக்க சென்றனர்
    X

    கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க படகுகளில் கடலுக்கு செல்வதை படத்தில் காணலாம்.

    மாண்டஸ் புயல் கரையை கடந்தது: கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க சென்றனர்

    • சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
    • 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன.

    கடலூர்:

    மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மாமல்லபுரம் பகுதியில் சுமார் 60 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கரையை கடந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சுமார் 14 அடி உயரம் உயர்ந்து, கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி முதல் கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல க்கூடாது என மீன்வ ளத்துறை அதிகா ரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் இதனை மீறி மீனவர்கள் யாரேனும் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் மீனவர்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த படகுகளை பாதுகாப்பாக முன்னோக்கி கொண்டு வந்து வைத்தனர்.

    மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இது மட்டுமின்றி கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன. இந்த நிலையில் நேற்றுடன் இயல்புகள் நிலைக்கு கடல் பகுதி திரும்பியதால் மீனவர்கள் இன்று 11-ந் தேதி முதல் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீனவளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் மீன் பிடிக்க சென்றனர். மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் நள்ளிரவு முதல் ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்று மீன் பிடித்து கடலூர் துறைமுகம் மற்றும் கரைக்கு ஆர்வமுடன் கொண்டு வந்து மீன்கள் விற்பனை செய்ததை காண முடிந்தது.

    Next Story
    ×