search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கலாசார போட்டிகள்
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கலாசார போட்டிகள்

    • ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு,கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உள் மதிப்பீட்டு குழு சார்பில் கலாசார போட்டிகள் கடந்த 13-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இளங்கலை மாணவ பிரிவு மற்றும் முதுநிலை மாணவ பிரிவுகளில் தனித்தனியே பாட்டுப்போட்டி, இசைக்கருவி வாசித்தல் போட்டி, குழு நடன போட்டி, புகைப்பட போட்டி, குறும்பட போட்டிகள் என மொத்தம் 14 வகையான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் முதல்வர் வைஸ்லின் ஜிஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். முன்னதாக ஆதித்தனார் கல்லூரியின் 2022-2023-ம் ஆண்டுக்கான கலைத்திறன் போட்டிகளின் பொறுப்பாளர் ஸ்ரீதேவி வரவேற்றார். ஆதித்தனார் கல்லூரியின் செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் வேலாயுதம், ரமேஷ் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×