search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில்  பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று  தொடங்கியது
    X

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் திருக்கோவிலில் ஆனி பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

    • சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது.
    • திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோ ற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா இன்று 25-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று காலை வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது பட்டாச்சாரி யார்கள் வேத மந்திரம் முழுங்க மங்கள வாத்திய த்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் சாமி மற்றும் கொடி மரத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு அம்ச வாகனத்திலும் , 2-ம் நாள் திருபல்லக்கிலும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், 3-ம் நாள் ராஜகோபாலன் சேவை, சேஷ வாகனத்திலும், 4 ம் நாள் ஸ்ரீ வேணு கோபாலன் சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் 5-ம் நாள் நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு அனுமந்த் வாகனத்திலும், 6-ம் நாள் மாலை யானை வாகனத்திலும், 7-ம் நாள் காலை சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், 8-ம் நாள் காலை வெண்ணைத்தாழி உற்சவம் இரவு குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை மாதம் 3-ந் தேதி, சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் 5-ந் தேதியும் நடைபெற வுள்ளது. 6-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவ டைகிறது.விழா விற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் சாரங்க பாணி, அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், கிஷோர், கமலநாதன், கோவிந்த ராஜலு மற்றும் தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×