search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  ஆழ்துளை கிணறுகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்: மாவட்ட கலெக்டர் உத்தரவு
    X

    கடலூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகளில் பாதுகாப்பு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்: மாவட்ட கலெக்டர் உத்தரவு

    • விபத்து களைத் தடுக்கும் வகையில் கண்டறிந்து உடனடி யாக மூடவும் உத்திரவிடப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பணிகளின் போது ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றம் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஆபத்துகளை ஏற்படுத்துவதுடன் சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு உடனடி யாக பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய, விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்தவெளி கிணறுகள் மற்றும் செய லிழந்த ஆழ்துளை கிணறு களின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த அலுவலர்களுக்கு உத்திர விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்திய மான அபாயங்களைக் குறைக்க அனைத்து திறந்த வெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளையும், திறம்பட பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த வெளி கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்து களைத் தடுக்கும் வகையில் கண்டறிந்து உடனடி யாக மூடவும் உத்திர விடப்பட்டுள்ளது. மேலும், கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகை யில் உடனடி நடவடிக்கை யாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரி குத்தகை தாரர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோன்று சாலையைப் பயன்படுத்து பவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில் கட்டுமானக் குழிகள் மற்றும் அகழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைத்திடவும், அவை வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும், அபாய கரமான இடங்களின் அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×