search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரையில் கிரிக்கெட் போட்டி
    X

    கிரிக்கெட் போட்டியினை ஆழ்வை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் தொடங்கி வைத்த காட்சி.

    தென்திருப்பேரையில் கிரிக்கெட் போட்டி

    • போட்டியில் வருகிற 12, 13-ந் தேதிகளில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
    • போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வருகிற 13-ந் (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது.

    தென்திருப்பேரை:

    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவடி பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டி மாவடி பண்ணை மக்கள் நலசங்கம் சார்பில் நடைபெற்றது.போட்டியில் மாவடி பண்ணை அணியும், மணல் மேடு அணியும் கலந்து கொண்டனர். கிரிக்கெட் போட்டியினை ஆழ்வை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    வருகிற 12, 13-ந் தேதிகளில் 30-க்கும் மேற் பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளை யாடுகின்றன. போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி களுக்கு முறையே ரூ. 8 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசுகள் வருகிற 13-ந் (ஞாயி ற்றுக் கிழமை) வழங்கப்ப டுகிறது. மேலும் அனைத்து அணிகளுக்கும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஞானையா, கிருஷ்ணசாரதி பண்ணையார், கவுன்சிலர் ஆர்த்தி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை மாவடி பண்ணை மக்கள் நல சங்கம் சார்பில் செய்து இருந்தனர்.

    Next Story
    ×