என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எருதுவிடும் விழா
- காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
- அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 3-ம் ஆண்டு எருதுவிடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, பர்கூர் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதையடுத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இலக்கை விரைவாக கடந்த காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன.
இந்த விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்