search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலை கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
    X

    சுவாமிமலை கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

    • பணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கம் காணிக்கை வசூலானது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநா தசாமி கோவிலில் உள்ள 12 உண்டியலில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த பணியில் கும்பகோ ணம் கே.எஸ்.கே கல்லூரி மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த பணிகளை கோவிலின் உதவி ஆணையர் முத்துராமன், துணை ஆணையர்உமா தேவி, கண்காணிப்பாளர் பழனிவேல், ஆய்வாளர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதில் பொதுமக்கள் செலுத்திய காணிக்கை ரூ.27 லட்சத்து 90 ஆயிரத்து 250 ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 932 கிராம் வெள்ளியும், 204 வெளிநாட்டு கரன்சி களம் பெறப்பட்டு, அவை அனைத்தும் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்ப ட்டன.

    Next Story
    ×