search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ 1.17 கோடியில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்
    X

    கடலூர் மஞ்சகுப்பம் 8வது வார்டு பெண்ணையாறு ரோடு பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை மாநகர மேயர் சுந்தரி ராஜா அடிக்கல் நாட்டினார் அருகில் மாநகர ஆணையர் கிருஷ்ணமூர்த்தி திமுக மாநகர செயலாளர் ராஜா உள்ளனர்

    ரூ 1.17 கோடியில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்

    • ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட பகுதியில் சாலை வசதி , குடிநீர் வசதி மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    இன்று காலைகடலூர் மாநகராட்சி 8-வது வார்டில் ஒரு கோடியே 17 லட்சம் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டு பணியை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மாநகராட்சி கவுன்சிலர் சுமதி ரங்கநாதன், மண்டல குழு தலைவர் சங்கீதா, பகுதி துணை செயலாளர் கார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×