திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று 60 பெண்கள் உள்பட 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். 164 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தபபட்டுள்ளது. நேற்று தடுப்பூசி சிறப்பு முகாம் 830 இடங்களில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 7,468 பேருக்கு முதல் தவணையும், 2,74,442 பேருக்கு 2ம் தவணையும் போடப்பட்டது.

மேலும் பூஸ்டர் தடுப்பூசி 1,455 பேருக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் நேற்று ஒரு நாளில் மட்டும் 36,365 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com