search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகம்பட்டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா
    X

    பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்

    நாகம்பட்டி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

    • பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டி அரசு கலைக் கல்லூரியில் 16 -வது பட்டமளிப்பு விழா நடந்தது
    • சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை அருகே உள்ள நாகம்பட்டி அரசு கலைக் கல்லூரியில் 16 -வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் காசிராஜன் வரவேற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், பட்டம் பெற உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமை படும்படியாக நடந்து கொள்ள வேண்டும் மத பேதங்களை மறந்து தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்க பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    இதில் பல்வேறு துறைகளில் பயின்ற 136 கிராமப்புற மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் காசிராஜன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×