search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்று கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
    X

    வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்று கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

    • அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன்
    • இவர் மீது கொலைமுயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

    நெல்லை:

    அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன் (வயது26). இவர் மீது கொலைமுயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

    இவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவருக்கு ஆழ்வார்குறிச்சி பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் அம்பை கோர்ட்டு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து உள்ளது. இதற்கிடையே வடிவேல் மணிகண்டன் கடந்த 4 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வடிவேல் மணிகண்டனை கைது செய்து ஆஜர்படுத்த அம்பை கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து இனஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×