search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து அட்டகாசம்: குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
    X

    சூளகிரி கோட்டை தெருவில் குரங்குகளால் அறுந்து விழுந்து கிடக்கும் கேபில் ஒயர்களை படத்தில் காணலாம்.

    தொடர்ந்து அட்டகாசம்: குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    • அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது.
    • கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணசிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி ஊராட்சி பகுதிகளான கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ் தெரு, மூஸ்லீம் தெரு, கே.கே நகர், ஒசூர் பேரிகை சாலை பகுதி, அண்ணா நகர், கமலா காலனி, ஒசூர் கிருஷ்ணகிரி சாலை பகுதி, நெசவாளர் தெரு, மற்றும் பல பகுதி களில் குரங்குகள் தொடர்ந்து அட்ட காசம் செய்து வருகிறது.

    மேலும் குரங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து சமையல் , காய்கறிகள், பழங்கள், உணவு ஆகிய வற்றை எடுத்து செல்கிறது.

    மேலும் வீட்டு தோட்டத்தில் செடிகள் எதுவுமே வளர்க்க முடியாத நிலை எற்பட்டு வருகிறது.

    இது மட்டும் இல்லாமல் அனைவரையும் கடிக்கும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.

    இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×