திருவெண்ணைநல்லூர் நீதிமன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி: பேரூர் தலைவர் நேரில் ஆய்வு

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் அல்லா சாமி கோவில் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம். பல்வேறு பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் அல்லா சாமி கோவில் தெருவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் நடைபெறும் குளம் புனரமைப்பு பணி, ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் விளையாட்டு பூங்கா பணி, மாவட்ட நீதிமன்ற அலுவலகம் மற்றும் கழிவறை கட்டும் பணி போன்ற பல்வேறு பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com