search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொக்கம்பட்டியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி -  சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்
    X

    நீர்த்தேக்க தொட்டிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டிய காட்சி.

    சொக்கம்பட்டியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி - சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்

    • மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.
    • வார்டு உறுப்பினர் ராஜா மறவன் உட்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான டாக்டர் செல்லத்துரை மற்றும் அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, தி.மு.க. மாவட்ட கவுன்சிலரும். மாவட்ட துணைச் செயலாள ருமான கனிமொழி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், யூனியன் கவுன்சிலர்கள் கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், கிளை செயலாளர் சுப்பிரமணியன், சொக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பச்சைமால், வார்டு உறுப்பினர் ராஜா மறவன் உட்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×