search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • ஆர்பாட்டத்தில் மத்திய அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் நடைபெற்றது.

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநில பொதுச் செயலாளர்கள், மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர்கள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வட்டார தலைவர்கள்,நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள்,மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள்,காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்பாட்டத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ,பொது நிறுவனங்களின் சொத்துக்களை பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு தாரை வார்த்ததாக கூறி கோஷங்கள் எழுப்பி னர்.

    நிகழ்ச்சியில் பாளை வடக்கு வட்டார பகுதி களை சேர்ந்த மாற்று கட்சி இளைஞர்கள் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.அவர்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார்.

    Next Story
    ×