மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை.மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
Published on

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன், பயிற்சி சப் -இன்ஸ்பெக்டர் நஸ்ரின் மற்றும் போலீசார் கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது கபிஸ்தலம் அருகே உள்ள தேவனோடை கொள்கை ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை வழிமறித்து சோதனை செய்ததில் மாட்டு வண்டி ஓட்டி வந்த தேவனோடை நடுத்தெரு ராஜன் (வயது 45) என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஜோதி ராஜனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com