search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்போது எடுத்தபடம்.

    சிவகிரியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷம் எழுப்பப்பட்டது.

    சிவகிரி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சார்பாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர் தென்காசி மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பையா, தென்காசி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கிதுரை, சிவகிரி கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் ராஜேந்திரன், சிவகிரி பேரூராட்சி கவுன்சிலர் அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் போன்றவற்றை மானிய விலையில் வழங்கிட வேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிககைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    Next Story
    ×