ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புகார் எண்

கட்டணமில்லா தொலைபேசி 1800 599 5950 எண் வழங்கப்பட்டுள்ளது.அறிவிப்பு பலகையை தருமபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் வைத்துள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புகார் எண்
Published on

தருமபுரி,

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்திரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 599 5950 எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த எண் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வகையில் கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம், பேருந்து நிலையம், தொப்பூர் டோல்கேட், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகையை தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com