search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சிந்துபூந்துறை எரிவாயு மேடையில் உடல் தகனத்திற்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்
    X

    இறந்தவர் உடல்களை எரிப்பதற்கு கூடுதல் கட்டணம் கேட்டதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

    நெல்லை சிந்துபூந்துறை எரிவாயு மேடையில் உடல் தகனத்திற்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்

    • நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 மாநகராட்சி சார்பில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.
    • எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, பாளை ஆகிய இரட்டை நகரங்களை உள்ளடக்கியதாக நெல்லை மாநகராட்சி உள்ளது. இங்கு வசிப்போர், இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை தாமிர பரணி நதிக்கரையோரங்களில் செய்து வந்தனர்.

    இதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்கும் வகையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியின் போது அப்போதைய தச்சை மண்டல சேர்மன் சுப்பிர மணியன் முயற்சியில் மாநகராட்சி சார்பில் எரி வாயு தகனமேடை அமைக்கப்பட்டது. அங்கு காத்திருப்போர் கூடம், பூங்கா உள்ளிட்டவை தாமிர பரணி நதிக்கரையோரம் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பலன் அடைந்து வருகின்றனர். அதனை ஒப்பந்த அடிப் படையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் பராமரித்து வந்தனர்.

    அங்கு இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் குறைந்தது 5 முதல் 7 உடல்கள் வரை இங்கு எறியூட்டப்பட்டு வருகிறது.

    பராமரிப்பு மோசம்

    இங்குள்ள அதிநவீன எந்திரங்களில் 2000 பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கி சுமார் 1 மணி நேரத்தில் சடலங்களை எரித்து வந்தனர். இந்நிலையில் இந்த எரிவாயு தகன மேடையில் சடலங் களை எரியூட்டுவதற்கு ரூ.2000 மட்டுமல்லாமல், கூடுதலாக வும் ரூ.2 ஆயிரம் பணம் வசூலிக்கப்படுவதாக இறந்த வர்களின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நேற்று கூட ஒரு சடலத்தை எரிப்பதற்கு கூடு தலாக பணம் கேட்டதாக கூறி அங்கே இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தியான மண்டபம் போல் செயல்பட்ட இந்த எரிவாயு தகன மேடையில் பூங்காக்கள் சிதிலமடைந்து உள்ளது. அங்கு காம்பவுண்டு சுவர்கள் இடிந்த நிலையில் காணப்படுவதால் அதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக் கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கமிஷனருக்கு மாநகர பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×