search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில்சர்வதேச மகளிர் தின விழா
    X

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில்சர்வதேச மகளிர் தின விழா

    • நடனம், பாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி என பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
    • வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மிகச்சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவினை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் தலைமை ஆகியோர் தலைமை வகித்தனர்.

    பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் மற்றும் நிர்வாக இயக்குனர் பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இவ்விழாவினை முன்னிட்டு நடனம், பாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி என பல பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் ஆசிரியை கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளியின் தாளாளரின் தாய் சாந்தி வேடியப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் அனைவருக்கும் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியப்பெரு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Next Story
    ×