search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் பேரூராட்சியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி  தொடக்கம்
    X

    சாத்தான்குளம் பேரூராட்சியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

    • சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது.
    • முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூ ராட்சியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது

    சாத்தான்குளம் பேரூராட்சியில் 15-வார்டு பகுதிகள் உள்ளன. அனைத்து பகுதியில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை மு ழுவதுமாக அழிக்கும் நோக்கத்தோடு சாத்தான்குளம் பேரூராட்சி நிர்வாகமும் - சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றமும் இணைந்து அதனை அகற்றும் பணிநேற்று தொடங் கப்பட்டது.

    முதற்கட்டமாக சாத்தான்குளம் பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிக்கு சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜோசப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற தலைவர் மலையாண்டி பிரபு முன்னிலை வகித்தார்.

    முதற்கட்டமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் முட் செடிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. படிப்படியாக அனைத்து பகுதியிலும் முட்செடி களையும் அகற்றி முட் செடிகள் இல்லாத சாத்தான்குளமாக மாற்றிட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் நிர்வாகிகள் அய்யா குட்டி, முத்து இசக்கி, முத்துராமலிங்கம், வீரபுத்திரன், 11-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாராஜன், ஜமாத் தலைவர் மகதூம், சுகாதார மேற்பார்வையாளர் தங்கமுத்து ,சாத்தான்குளம் நகர தி.மு.க. துணைத் செயலாளர் மணிகண்டன், நகர பொருளாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×