search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் சிக்கல் சிங்காரவேலர்.

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

    • சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • 17-ம் தேதி அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர் முடித்ததாக கந்தபுராண வரலாற்றில் கூறும் சிங்கார வேலவர் கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .

    பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கண்ணி சக்தி வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாக கந்த புராண வரலாறு.

    நாகப்பட்டினம் அடுத்த சிக்கல் அமைந்துள்ள சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் திருமஞ்சனத்தில் எழுந்தருளி அதனை தொடர்ந்து வீதி உலா காட்சி நடைபெற்றது முன்னதாக பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகிற 17-ம் தேதி இரவு 8 மணிக்கு பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அப்போது சிங்காரவேலருக்கு வேர்வை சிந்தும் காட்சி உலகில் வேறு எங்கும் நடைபெறாத அபூர்வ காட்சி ஆகும் மறுநாள் சூரசம்கார விழா எதிர்வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×