search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி மாயம்
    X

    கல்லூரி மாணவி மாயம்

    தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வரும் மாணவி வேளாங்கண்ணிக்கு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அடுத்த புலவநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வேளாங்கண்ணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெற்று வந்தவர்.

    கடந்த 12-ம் தேதி வேளாங்கண்ணி சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் காயத்ரியின் பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சக்திவேல் திட்டச்சேரி போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×