search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி மாயம்
    X

    கோவையில் கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி மாயம்

    • மாணவி தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி பேஷன் டிசைன் படித்து வந்தார்.
    • மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    கோவை:

    கோவை கணபதி அண்ணா நகரை சேர்ந்த மாணவி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி பேஷன் டிசைன் படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

    ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து மாணவியின் அறையில் பெற்றோர் ஆய்வு செய்த போது கடிதம் ஒன்று இருந்தது. இதனை கைப்பற்றி பார்த்தனர். அப்போது அதில் மாணவி தன்னை தேட வேண்டாம் என கடிதம் எழுதியிருந்தார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.

    பீளமேடு ஹாட்கோ காலனியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், கடந்த மே மாதம் ராஜேஷ் என்ற இளைஞருடன் சென்றார். இளைஞரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறுமியை மீண்டும் அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×