என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் தனியார் பஸ் மீது கல்லூரி பஸ் மோதல்
- காயமின்றி மாணவர்கள் உயிர் தப்பித்தனர்.
- தினமும் காலையில் மேட்டுப்பா–ளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை பஸ்களில் ஏற்றுக்கொண்டு கோவைக்கு கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பல்வேறு தனியார் கல்லூரி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தினமும் காலையில் மேட்டுப்பா–ளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை பஸ்களில் ஏற்றுக்கொண்டு கோவைக்கு கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
அதேபோல் இன்று கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி பஸ் மேட்டுப்பாளையத்திற்கு வந்து, மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது.
மேட்டுப்பாளையம்-கோவை ரோடு வேளாங்கண்ணி அருகே சென்ற போது கல்லூரி பஸ், முன்னால் சென்ற தனியார் பஸ்சின் மீது மோதியது. இதில் கல்லூரி பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கல்லூரி பஸ்சில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் காயம் இன்றி தப்பித்தனர். கல்லூரி பஸ்சை டிரைவர் அதிவேகமாக இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி பஸ்கள், பள்ளி பஸ்கள், தனியார் பஸ்கள்,அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்குவதால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், வட்டார போக்குவரத்து அலுவலரும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்