search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்முதல் நிலையத்தில் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    கொள்முதல் நிலையத்தில் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    கொள்முதல் நிலையத்தில் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 328 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நெல்கொள்முதல் பதிவேடு, சாக்குகள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டையும், நெல் மூட்டை எடை எந்திரத்தின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை தாலுகா கற்பகநாதர்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தில் சாய்தளம், குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர், கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு வருவாய் துறையின் பயிர் சாகுபடி பதிவேட்டில் சரியாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இதுவரை 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8425 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையாக ரூ. 91 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 360 சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×