பெத்தண்ணன் கலையரங்கில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.பணிகளை விரைந்து தரமாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வளர்ச்சி பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் காந்திஜி சாலை அருகே ராணி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கல்லணை கால்வாய் நடைப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.இதையடுத்து சிவகங்கை பூங்காவில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் பெத்தண்ணன் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார் . பணிகள் அனைத்தையும் விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com