search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு
    X

    பள்ளி வாகனங்களை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்த காட்சி. அருகில் ஆர்.டி.ஓ. சந்திரசேகர். 

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

    • பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    135 பள்ளி வாகனம்

    இந்நிலையில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஆர்.டி.ஓ. சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 135 பள்ளிகளை சேர்ந்த 511 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் வேகக்க ட்டுபாட்டு கருவி, கண்காணிப்பு காமிரா, முதல் உதவி பெட்டி, வாகனங்களின் படிக்கட்டு, இருக்கைகள், அவசர கால வழி, தீயணைப்பு கருவி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உளளதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் டிரைவர்களுக்கு 108 மருத்துவ குழுவின் மூலம் முதல் உதவி சிசிக்சை பற்றிய விளக்கம் மற்றும் தீயணைப்பு துறை மூலம் டிரைவர்களுக்கு அவசர காலத்தில் தீயணைப்பானை பயன்படுத்தும் முறைப்பற்றி செயல்முறை அளிக்கப்பட்டது.

    டிரைவர்களுக்கு அறிவுரை

    மாணவர்களை பாது காப்பாக ஏற்றிச் சென்று விபத்தில்லாமல் இயக்குமாறும் மற்றும் வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிற்கு மாறும் அறிவுறுத்தப்பட்டது.

    மாணவர்களை விழிப்புணர்வோடு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டது.

    Next Story
    ×