search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகையூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    முகையூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • முகையூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
    • கலெக்டர் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக விழுப்பு ரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் வந்தார். அருளவாடி கிராமத்தில் 28 லட்சத்து 18 ஆயிரம் செலவில் பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, மற்றும் ரூபாய் 5 லட்சத்து 51 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கும் பணி, ரூ. ஒரு லட்சத்து 55 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் நூலகம் பழுது நீக்கம் பணி ரூ. 3 லட்சத்து 52 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் மினி பவர் பம்ப் கட்டும் பணி ஆகியவ ற்றையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஆற்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டிட த்தையும், வீரசோழபுரம் கிராமத்தில் ஊராட்சி ரூ. 42 லட்சத்து 65 ஆயிரம் செலவில் நடை பெற்று வரும் ஊராட்சி செயலக கட்டிடம் கட்டும் பணியை யும் பார்வையிட்டதுடன் பணியை தரமாக வும் விரைவாகவும் செய்து முடிக்க உத்தரவிட்டார்.

    முகையூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு திடீரென சென்ற மாவட்ட கலெக்டர் பழனி அங்கு சிகிச்சைக்கு வந்திருந்த மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளி களிடம் குறைகள் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர்களிடமும் ஏதேனும் குறைகள் உள்ளதா என கலெக்டர் பழனி கேட்டார். அப்போது மருத்துவம னைக்கு சிகிச்சை க்கு வரும் நோயாளி களுக்கு கூடுதலாக ஒரு கழிவறை வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கலெக்டர் பழனி அருகில் இருந்த முகையூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்களிடம் நோயாளிகளில் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் கழிவறை கட்டிடம் கட்டித் தர உத்தரவி ட்டார். ஆய்வின்போது முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம் ,நாராயணன், கண்டாச்சி புரம் தாசில்தார் கற்பகம், உதவி பொறியாளர்கள் நாகராஜ் மற்றும் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×