என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் சாப்பாட்டில் விஷம் கலந்து தின்று தம்பதி தற்கொலை முயற்சி
- காளிமுத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காவ லாளியாக வேலை பார்த்து வந்தார்.
- காளிமுத்துவும், அவரது மனைவி பிரியாவும் வாயில் இருந்து நுரை தள்ளியபடி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
கோவை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 57). இவரது மனைவி பிரியா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
காளிமுத்து கோவில்பா ளையம் அருகே உள்ள பண்ணாரியம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது குடும்பத்தினரும் இங்கேயே வசித்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த காளிமுத்துவும், அவரது மனைவி பிரியாவும் வாயில் இருந்து நுரை தள்ளியபடி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காவலாளி காளிமுத்துவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை கடந்த 23-ந் தேதி முதல் வேலையை விட்டு நிறுத்தி உள்ளனர். மேலும் அவர் குடும்பத்துடன் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த காளிமுத்து மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. விஷத்தை குழம்பில் கலந்து 2 பேரும் சாப்பிட்டுள்ளனர். இதில் தான் அவர்கள் மயங்கி விழுந்தது தெரியவந்தது.
இது குறித்து கோவில்பா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்