search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி குமரியில் தேங்காய் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    பொங்கல் பண்டிகையையொட்டி குமரியில் தேங்காய் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

    • குமரி மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிக அளவில் தேங்காய் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • தேங்காய் விளைச்சல் கடந்த 10 ஆண்டில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தேங்காய் முக்கிய உணவு பயிராக உள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. அதிலும் ஈத்தாமொழி தோங்காய் என்றால் மவுசு அதிகம். இங்குள்ள உயரமான தென்னை மரங்கள் குமரியின் பாரம்பரிய சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி மற்றும் குளச்சல் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த பூர்வீக வகை தென்னைமரங்கள் காணப்படுகின்றன.

    குமரி மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிக அளவில் தேங்காய் பயன்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் வரை தேங்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.23-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ தேங்காய் மொத்த விற்பனைக்காக வியாபாரிகளிடம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. சந்தைகளில் கிலோ ரூ.35 க்கு விற்பனையாகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுபற்றி ஈத்தாமொழியை சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரி முத்துசரவணன் கூறியதாவது:-

    தேங்காய் விளைச்சல் கடந்த 10 ஆண்டில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. முன்பு ஒரு எக்டருக்கு 250 தென்னைகள் பயிரிட்டால் அதில் சுமார் 5 ஆயிரம் தேங்காய் வரை கிடைக்கும். தற்போது அதே 250 தென்னைகளில் இருந்து சுமார் 1000 முதல் 1,500 தேங்காய்கள் மட்டுமே கிடைக்கிறது. தற்போது பனி காலம் என்பதால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×