search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதானப்பட்டியில் தேங்காயை தரையில் உடைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னை விவசாய சங்கத்தினர்.


    தேவதானப்பட்டியில் தேங்காயை தரையில் உடைத்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • தேவதானப்பட்டியில் போதிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டம்
    • தேங்காயை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டியில் மத்திய மாநில அரசு தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்தினர்.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை ரூ.7-க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மற்றும் தேங்காய் கொள்முதல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தமிழக அரசும், மத்திய அரசும் தேங்காய்க்கு உரிய கொள்முதல் விலையை வழங்க கோரியும் வெளிநாடுகளிலிருந்து தேங்காய் உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

    இந்நிலையில் தென்னை விவசாயிகள் கூறுகையில், தேங்காய் உற்பத்தி செய்வதில் உரம் விலை மற்றும் கூலியாட்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    எனவே தேங்காய் கிலோ ரூ.50க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதேபோல் கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.140 க்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும். கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×