search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணிமுதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
    X

    தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி மணிமொழி தூய்மை பணியை தொடங்கி வைத்த காட்சி.

    தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணிமுதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்

    • தருமபுரி ஒருங்கிணைந்த வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
    • முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா இயக்கம் மகாத்மா காந்தியடிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தூய்மையான மற்றும் சுகாதாரமான நாட்டை உருவாக்குவது லட்சியம் என்று பாரத பிரதமர் தொடங்கப்பட்டு தற்போது மக்களிடையே மக்கள் இயக்கம் மாறியுள்ளது.

    நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் தூய்மை இயக்கம் சார்ந்த திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் இன்று தூய்மை இயக்க பணிகள் நடைபெற்றன.

    அதன்படி தடங்கம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணியினை தொடங்கி வைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்களுடன் இணைந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்தத் தூய்மை இயக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×