search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர் பேரூராட்சியில் தூய்மை இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி
    X

    விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    அய்யலூர் பேரூராட்சியில் தூய்மை இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி

    • அய்யலூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மக்கும், மக்காத குப்பை, பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது சுகாதாரம், துணிப்பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    வடமதுரை:

    அய்யலூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மக்கும், மக்காத குப்பை, பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது சுகாதாரம், துணிப்பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கடவூர் பிரிவிலிருந்து கருவார்பட்டி, கந்தமநாயக்கனூர் வரை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கந்தம நாயக்கனூரில் இருந்து ரங்கப்பன் நாயக்கர் குளத்திற்கு நீர் வரத்து செல்லும் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணியினை பேரூராட்சி தலைவர் கருப்பன் தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி, துணைத்தலைவர் செந்தில், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    Next Story
    ×