

நெல்லை:
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி முதற் கட்டமாக தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு பணி நெல்லை மாநகராட்சி யில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
கழிவுநீர் குழாய் பராமரிப்பு, மலக்கசடு கழிவு சேகரிப்பு, தொட்டியை சுத்தம் செய்தல்,பொது சமுதாய நிறுவன கழிப்பறை களை சுத்தம் செய்தல், கழிவுநீர், மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு மற்றும் பரா மரிப்பு, மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் ஆகிய தூய்மை பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுவார்கள்.
கணக்கெடுப்பு பணியில் மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் நிறு வனங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொண்டு வரு கிறார்கள்.
நெல்லையில் நடை பெறும் தூய்மை பணி யாளர்கள் கணக்கெடுப்பு முகாமை, மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர் முருகன் உள்ளார்.
கணக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளவேண் டும் என அவர் கேட்டு கொண்டார்.
தொடர்ந்து அவர் 13-வது வார்டு அலுவல கத்தில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார். பின்னர் கணக்கெடுப்பு பணியா ளர்களுக்கு வுரை வழங்கி னார். தகுதி வாய்ந்த தூய்மை பணி யாளர்களை விடு படாமல் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். சரியான விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இந்த ஆய்வில் மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் முருகன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.