search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டுக்கோட்டையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டடம்
    X

    துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி.

    பட்டுக்கோட்டையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டடம்

    • சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
    • சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில், பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திடீரென கால வரையறை யற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக எங்களை பணியமர்த்த வேண்டும். சட்டவிரோதமாக செயல்ப டும் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,

    தனியாருக்கு டெண்டர் விடப்பட்டிருந்தால் அதற்கான நகலை காண்பி க்க வேண்டும், இந்த மாதம்5ம் தேதி இந்த சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் போன்ற கோரி க்கைகளை வலியுறுத்தினர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கவுன்சி லர் சதாசிவகுமார் தலைமை தாங்கினார்.

    இந்த திடீர் போராட்ட த்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நகராட்சி பொறுப்பு ஆணையர் குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதில் ஞாயிற்றுக்கிழமை அன்று டெண்டர் எடுத்த நபர் நேரில் வந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என உறுதி அளித்தார்.

    அதன் பிறகு போராட்டக்காரர்கள் அதுவரை தாங்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாகவும், இந்த டெண்டர் முறை தவறானது என்றும், ஒருவேளை சட்டப்படி டெண்டர் விடப்பட்டி ருந்தாலும் அதற்கான எந்த உத்தரவும் தங்களிடம் காண்பிக்கப்படவில்லை என்றும் கூறினர்.

    மேலும் எந்த உத்தரவும் இல்லாமல் டெண்டர் எடுத்த நபர் என கூறிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட சூப்பர்வைஸர்கள் தங்கள் மீது அதிகாரம் செலுத்துவதை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினர்.

    பின்னர் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் தற்பொழுது நகராட்சி அலுவலகத்திற்குள் பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களின் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் தொட ர்பாக கூறி சென்றுள்ளனர்,தொடந்து அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×