என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலஞ்சி பேரூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளரை பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் கவுரவித்த போது எடுத்த படம்.
இலஞ்சி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இலஞ்சி பேரூராட்சியில் அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய் சண்முகநாதன் விருது வழங்கி கவுரவித்தார்.
தென்காசி:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை முன்னிட்டு இலஞ்சி பேரூராட்சியில் இந்திய அரசியலமைப்பு முகப்புரையை உறுதிமொழியாக அனைத்து பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பாக தூய்மை பணியாற்றிய 2 தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சின்னதாய் சண்முகநாதன் விருது வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர், இலஞ்சி பேரூராட்சிக் கழக செயலாளர் முத்தையா பாண்டியன்,பேரூராட்சியின் செயல் அலுவலர் அமானுல்லா, இளநிலை உதவியாளர் சங்கர நாராயணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






