search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.49.83 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிட பணிகள்
    X

    கீழ்குந்தா பேரூராட்சியில் ரூ.49.83 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிட பணிகள்

    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.49.83 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    இதனை கலெக்டர் அருணா நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாம்ராஜ் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவியர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சென்று அங்கு சமையல்கூடம் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

    முன்னதாக கிண்ணக் கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு அத்யாவசிய பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினார்.

    அப்போது மாவட்ட கலெக்டருடன் ஊரகவ ளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, குந்தா தாசில்தார் கலைச் செல்வி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×