search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காணும் பொங்கல் கலை நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்.
    X

    காணும் பொங்கல் கலை நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல்.

    • இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சாத்துக்கூடல் கீழ்பாதியில் காணும் பொங்கலை முன்னிட்டு அக்கிராமத்தில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிவசங்கர்,ஹரி கிருஷ்ணன், ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஆலிச்சி க்குடி கிராமத்தில் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு கூடியிருந்த இளைஞர்கள் வாகனத்தில் இந்த சாலையில் செல்லக்கூடாது என வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

    அவர்களிடம் வாக்கு வாதம் செய்த சிவசங்கர், ஹரி கிருஷ்ணன் இருவரும் அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று பரிசு பொருட்களை வாங்கி விட்டு அதே வழியில் மீண்டும் சென்றபோது, 20- க்கும் மேற்பட்ட இஇருவரும் இருசக்கர வாகனத்தில் சாத்துக்குடல் கீழ்ப்பாதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் தகவல் அறிந்து அங்கு வந்த சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமத்தைச் சார்ந்த பாலமுருகன், சிவா அவர்கள் இருவரையும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட போது பாலமுருகன், சிவாவையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டனர இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரு தரப்பினரிடயே ஏற்பட்ட மோதலின் காரணமாக சாத்துக்கூடல் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×