search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் உச்சம் தொட்ட மிளகாய் விலை-ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை
    X

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த மிளகாய்.

    பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் உச்சம் தொட்ட மிளகாய் விலை-ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை

    • மிளகாய் செடியில் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.
    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுரண்டை, சாலைப்புதூர், நாகல்குளம், மேல பட்டமுடையார்புரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், செட்டியூர், நாட்டார்பட்டி, அரியப்பபுரம், குறுங்கா வனம், வெள்ளக்கால், இடையர்தவணை, குறும்பலாபேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.

    அவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு மிளகாய் செடியில் அதிக வைரஸ் நோய் பாதிப்புகள் ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.

    இதனால் மார்க்கெட்டுக்கு சுற்று கிராம பகுதிகளில் இருந்து விவசா யிகள் கொண்டு வரும் மிளகாய் வரத்து குறைந்து உள்ளதால் கடந்த 15 நாட்க ளுக்கும் மேலாக மிளகாயின் விலையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையானது.

    தமிழகம் முழுவதும் மட்டுமன்றி மைசூர் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மிளகாய் கொள்முதல் விலையும் ஒரே விலை யாகவே உள்ளது. வைரஸ் நோயில் இருந்து தப்பிய மிளகாய் செடிகளின் காய்கள் நல்ல விலைக்கு செல்வதால் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் மிளகாய் விலை விற்பனையாகி வருவதாக விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர்.

    Next Story
    ×