search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் - அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்
    X

    நான் முதல்வன் - உயர்வுக்குப்படி புத்தகங்களை மாணவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் - அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

    • மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற வேண்டும் என்பதால் நான் முதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.
    • கல்லூரி புத்தகங்கள் தவிர உலக அளவில் நல்ல புத்தகங்களை வாங்கி வாசித்து கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி மற்றும் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தொழில்நுட்ப பயிற்சி

    முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தேவையான தொழிற் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளலாம். கல்லூரிக் காலம் உங்களை பட்டை தீட்டிக் கொள்ளும் காலமாகும். வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழிலதிபராவதற்கும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான திட்டம் தான் நான் முதல்வன் திட்டமாகும். மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை பெற வேண்டும் என்பதால் நான் முதல்வன், கல்லூரி கனவு போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.

    மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபக ரணங்களை நிறுவி யுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, நாகலாபுரம், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்கான உபகரணங்கள் நிறுவப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் படித்து முடித்தவுடன் டாடா நிறுவனம் நேரடியாக வேலைவாய்ப்பு அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.

    புதுமைப்பெண் திட்டம்

    புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. எதிர்கால தலைவர்களாகிய தமிழ் சமுதாயமாகிய உங்களை பெருமைமிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று அறிவித்து பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    கல்விச்செல்வத்தை யாரும் பறித்துக்கொள்ள முடியாது. மாணவ, மாணவிகள் மனது வைத்தால் சாதிக்கக்கூடிய வயது இதுவாகும். கல்லூரி புத்தகங்கள் தவிர உலக அளவில் நல்ல புத்தகங்களை வாங்கி வாசித்து கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல. நீங்கள் அறிவாற்றலை பெற்று சிந்தனை மிக்கவர்களாக, தன்னம்பிக்கை உள்ள வர்களாக, தைரியமுள்ள வர்களாக இருந்தால் வாழ்க்கை எளிதாகும். வானம் வசப்படும். உங்களால் எல்லா வகையிலும் முன்னேற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அமைச்சர் கீதாஜீவன், நான் முதல்வன், – உயர்வுக்குப்படி உடனடி சேர்க்கை பெற்றதற்கான ஆணையை 10 பேருக்கும், கல்விக்கடன் பெறுவதற்கான ஆணையை 14 பேருக்கும், சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை ஆகியவற்றை வழங்கினார்.

    மேலும், புதுமைப்பெண் - திட்ட விளக்க கையேடுகள் 10 பேருக்கு, நான் முதல்வன் - உயர்வுக்குப்படி புத்தகங்கள் 10 பேருக்கும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, பயிற்சி கலெக்டர் பிரபு, சமூகநல அலுவலர் ரதிதேவி, தாசில்தார் பிரபாகர், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செ யலாளர் கீதா முருகேசன், மண்ட லத்தலைவர் அன்ன லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணை அமைப்பாளர் பால்ராஜ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துபாண்டி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பவாணி மார்ஷல், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, வட்ட ச்செயலாளர் முத்துராஜா, மகளிர் அணி ரேவதி, சந்தன மாரி, சத்யா, உமாமகேஸ்வரி மற்றும் கருணா, மணி, பிரபாகர், அல்பட் மற்றும் மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் வீரபாகு நன்றி கூறினார்.

    Next Story
    ×