search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பட்டய நாள் கொண்டாட்டம்
    X

    விழாவில் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை சிறப்பு விருந்தினர்களுக்கு சந்தனமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பட்டய நாள் கொண்டாட்டம்

    • விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார்.
    • சங்கம் கடந்து வந்த பாதையினை பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பட்டய நாள் கொண்டாட்டம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடை பெற்றது.

    விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் ரோட்டே ரியன் ஜே.கே.குமார் கலந்து கொண்டார். விழாவுக்கு வள்ளியூர் மேக்ரோ கல்லூரி சேர்மனும், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமை தாங்கினார். பட்டய தலைவர் எஸ்.என்.தங்கதுரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டேரியன் அந்தோணி செல்லத்துரை ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். பின்பு ரோட்டே ரியன் முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன் விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை விழாவின் சிறப்பினை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

    பட்டைய தலைவர் எஸ்.என்.தங்கத்துரை சங்கம் கடந்து வந்த பாதையினை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.

    முன்னாள் மாவட்ட ஆளுநர் பட்டய செயலாளர் நவமணி இந்த சங்கத்தின் முன்னாள் தலைவர்களின் சிறப்பினையும் கூறி வாழ்த்துக்களை தெரி வித்தார். பட்டய தலைவர் எஸ்.என். தங்கத்துரை, பட்டய செயலர் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி ஆகியோருக்கு சந்தன மாலை, பொன்னாடை அணிவித்தனர்.

    முதன்மை விருந்தினர் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே.கே.குமாரை முன்னாள் துணை ஆளுநர் ரோட்டேரியன் ரமேஷ் வலங்கை புலி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜே.கே.குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சின்போது முன்னாள் சங்க தலைவர்களுக்கு பரிசு பொருட்களை பட்டய தலைவர், செயலர் வழங்கினர். மாவட்ட துணை ஆளுநர் வாழ்த்தி பேசினார். விருந்தினர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை ரோட்டேரியன் மேஜர் எல்.சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திசையன்விளை எலைக்ட் ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம், நாகர்கோவில் மிட்டவுன் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சவுத் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், வள்ளியூர் ரோட்டரி சங்கம், திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி சங்கம், பேர்ல்ஸ் சிட்டி தூத்துக்குடி ரோட்டரி சங்கம், திருநெல்வேலி வெஸ்ட் ரோட்டரி சங்கம், நாகர்கோவில் ரோட்டரி சங்கம் ஆகிய சங்கங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்து ெகாண்டனர்.

    கலந்து கொண்ட அனைவருக்கும் தலைவர் டாக்டர் பொன் தங்கதுரை சிறப்பு பரிசுகளை வழங்கினார். செயலர் சுதிர் கந்தன் நன்றி கூறினார்.

    Next Story
    ×