சங்கரன்கோவில் நகராட்சியில் காலை சிற்றுண்டி திட்ட பணியாளர்களுடன் சேர்மன் ஆலோசனை

ஆலோசனை கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சங்கரன்கோவில் நகராட்சியில் காலை சிற்றுண்டி திட்ட பணியாளர்களுடன் சேர்மன் ஆலோசனை
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அந்தத் திட்டப் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். நகராட்சி மேற்பார்வையாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார். இதில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் எவ்வாறு உணவு தயாரிக்க வேண்டும்?. உணவு விநியோகம் செய்வது, குறிப்பிட்ட கால அளவில் உணவை பள்ளி மாணவர்களுக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com